தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக நவ ஜனதா பெரமுன குழுவினர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த போராட்டம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் இராசமாணிக்கம் சாணக்கியன் இலங்கை அரசாங்கத்திற்கு பாதிக்கும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சீனா நாடு நம் நாட்டில் இருந்து வெளியேறுங்கள் என்று. உண்மையில் நமக்கு பல உதவிகளை வழங்கிய நாடு சீனா.
சீனா மட்டுமா கடன் வழங்கியது இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் வழங்கியது.
ஆனால் இராசமாணிக்கம் சாணக்கியன் இந்தியாவுடன் இணைந்து கொண்டு மோடியின் கைப்பிடியாக செயற்படுகிறார். சீனா நாட்டுடன் சிக்கல் இருப்பின் நாங்கள் தீர்த்து கொள்கிறோம் தாங்களும் இலங்கை பிரஜை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சீனாவால் இலங்கையை பிரிக்க ஒருபோதும் முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்தியாவின் கைப்பொம்மையாக செயற்படும் சாணக்கியன் எம்.பி- மஹிந்தவின் ஆதரவாளர்கள் ஆவேசம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக நவ ஜனதா பெரமுன குழுவினர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையில் குறித்த போராட்டம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,கடந்த காலங்களில் இராசமாணிக்கம் சாணக்கியன் இலங்கை அரசாங்கத்திற்கு பாதிக்கும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சீனா நாடு நம் நாட்டில் இருந்து வெளியேறுங்கள் என்று. உண்மையில் நமக்கு பல உதவிகளை வழங்கிய நாடு சீனா.சீனா மட்டுமா கடன் வழங்கியது இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் வழங்கியது.ஆனால் இராசமாணிக்கம் சாணக்கியன் இந்தியாவுடன் இணைந்து கொண்டு மோடியின் கைப்பிடியாக செயற்படுகிறார். சீனா நாட்டுடன் சிக்கல் இருப்பின் நாங்கள் தீர்த்து கொள்கிறோம் தாங்களும் இலங்கை பிரஜை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சீனாவால் இலங்கையை பிரிக்க ஒருபோதும் முடியாது எனவும் தெரிவித்தார்.