இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6:04 மணிக்கு நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
இந்நிலையில் நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.
அந்தவகையில் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கியமைக்கு இலங்கை பாராளுமன்றத்தில் இன்று வாழ்த்தும்இ பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
பாராமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போது' எமது அண்டைநாடு என்ற வகையில் இந்தியாவின் இந்த சாதனைக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.' – என்று எதிர்க்கட்சி தலைவர் கூறினார். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
அத்துடன், விமல் வீரவன்சவும் வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.