நேற்றையதினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் பெற்றோல் விலை அதிகரிப்பானது, மக்கள் மாற்று வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கும் சூழலை ஏற்படுத்தும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய பேருந்து பயண கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது எனவும், அதன் தலைவர் கெமுனு விஜேரட்ன கொழும்பில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.