கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhehong Hong அவர்களினால் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு சூரிய ஒளி (Sollar power) விளக்குகள் வழங்கும் விசேட நிகழ்வு திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் (08)இடம்பெற்றது.
சீனாவின் யுன்ஹான் மாகாண மக்கள் சங்கத்தின் கைகோர்த்து நிகழ்ச்சியின் மூலம் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 40 பாடசாலைகளுக்கு இந்த சூரிய மின் விளக்குகள் விநியோகிக்கப்பட உள்ளன. இதனை அடையாளப்படுத்தும் வகையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 14 பாடசாலைகளை ஆளுநரும் சீனத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் திரு.ஹூ வெய் அவர்களும் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வுக்கு முன்னதாக ஆளுநருக்கும் சீனக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி திஸாநாயக்க, திருகோணமலை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், சீனத் தூதரக பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.