அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரும் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு பிரதமர் அலுவலகத்தினால் நேற்று விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் அவ்வாறானதொரு கூட்டத்தை கூட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
இதற்கு காரணம் பொதுஜன பெரமுனவிற்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்காமல் பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களின் பிரதிநிதிகளை தனித்தனியாக அரசாங்கம் இந்த கூட்டத்திற்கு அழைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.