உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா தொற்றானது இதற்கு மேலும் உலக பெருந்தொற்றாக இருக்காது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொவிட் பரவல் மிகப்பெரிய அளவுக்கு கட்டுப்பாட்டில் உள்ளது.
அத்துடன் உலக மக்கள் இந்த நோய்க்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இதற்கு மேலும் கொவிட் தொற்றானது உலக அவசர நிலைக்கு உட்பட்ட நோயாக இருக்காது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
கொவிட் நோய் உலகில் இருந்தாலும் கூட அது ஒரு சாதாரண நோயாகவே இதற்கு மேலும் பார்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.