தம்பதி ஒன்றுக்கு தலா 12,640 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
வந்தானி டிப்பாவேத்தும் மற்றும் அவரது கணவர் மேதி சின்பா ஆகியோரிற்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தம்பதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி மோசடி செய்தமையாலே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது குற்றங்களை அவர்கள் ஒப்புக் கொண்டதால் சிறை தண்டனை 5,056 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தம்பதிகள் இருவரும் இருபது ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனையை அனுபவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனெனில், அந்நாட்டில் அதிகபட்சமாக சிறைத் தண்டனை இருபது ஆண்டுகள் மட்டுமே நடைமுறையில் காணப்படுகின்றது.
அத்துடன், தம்பதியினர் ஏழு பேருடன் சேர்ந்து தமது சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால் 93% இலாபம் கிடைக்கும் என்று கூறி 2019 ஆம் ஆண்டு மார்ச் முதல் அக்டோபர் வரையில் ஃபேஸ்புக் மூலமாக பலரைச் சேர்த்துள்ளனர்.
இவர்களது மோசடி திட்டத்தில் மொத்தம் 2,533 பேர் 1.3 பில்லியன் பாட் (S$51.3 மில்லியன்) முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது