திருகோணமலை கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர்கள் 10 பேருக்கும் எதிர்வரும் 21/08/2023 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுருந்த நிலையில் அவர்கள் மீது எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் 21 ம் திகதிவரை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.