வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்கள் பூரணமாக கொவிட் தடுப்பூசி செலுத்தியமைக்கான சான்றிதழை சமர்ப்பித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று (7) முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.