மட்டக்களப்பு, காத்தான்குடி போலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, நெச்சுமுனை பிரதேசத்தை சேர்ந்த 18 வயது பாடசாலை மாணவன் ஒருவர் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது தூக்கில் தொங்கி தற்கொலைக்கும் முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கல்லடி நெச்சுமுனை பகுதியை சேர்ந்த பிரபல வைத்தியரின் மகனான அகிலன் துஷியந்தன், என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், உயிரியல் துறையில் உயர்தரம் பயிலும் குறித்த மாணவர் வீட்டில் வளர்க்கும் நாயை அடித்ததால் அதனைக் கேட்டு அவரின் தந்தை திட்டினார், என்றும் அதை அடுத்து மனமுடைந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் மேல் மாடியில் உள்ள சமையலறையில் தூக்கிட்டு கொண்டார். என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது.
தூக்கில் இருந்து காப்பாற்றப்பட்ட மாணவன் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார், என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாயை அடித்த சோகத்தில் உயிர்மாய்ப்பு - கிழக்கில் சம்பவம் மட்டக்களப்பு, காத்தான்குடி போலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, நெச்சுமுனை பிரதேசத்தை சேர்ந்த 18 வயது பாடசாலை மாணவன் ஒருவர் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது தூக்கில் தொங்கி தற்கொலைக்கும் முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.கல்லடி நெச்சுமுனை பகுதியை சேர்ந்த பிரபல வைத்தியரின் மகனான அகிலன் துஷியந்தன், என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், உயிரியல் துறையில் உயர்தரம் பயிலும் குறித்த மாணவர் வீட்டில் வளர்க்கும் நாயை அடித்ததால் அதனைக் கேட்டு அவரின் தந்தை திட்டினார், என்றும் அதை அடுத்து மனமுடைந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் மேல் மாடியில் உள்ள சமையலறையில் தூக்கிட்டு கொண்டார். என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது.தூக்கில் இருந்து காப்பாற்றப்பட்ட மாணவன் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார், என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.