சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்றையதினம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
குறித்த விவாதமானது இன்றும்(06) நாளையும்(07) இடம்பெறவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் தமது கட்சியின் தீர்மானம் தொடர்பில் அரசியற் கட்சிகளிடையே பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.