கட்சி பேதங்களை கடந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாடாளுமன்றில் தோற்கடியுங்கள் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
கிளிநொச்சியில் பிரஜைகள் குழுவினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் செயலாளர் சிங்கராசா ஜீவநாயகம் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டிலே கொண்டுவரப்படவிருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்திலே சில நாட்களில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையில் நீதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்,
இந்த சட்டம் தொடர்பாக பல்வேறுபட்ட எதிர்ப்புகள் காணப்படுவதுடன், அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் இருப்பதாகவும் சிங்கராசா ஜீவநாயகம் தெரிவித்தார்.
அதேவேளை, குறித்த சட்டத்தை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கமும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்