ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் மறுமலர்ச்சி அடைந்தே தீரும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இப்போதிருக்கின்ற தலைவர்களுள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகச் சிறந்த தலைவர் எனவும் அவரது வேலைத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்குச் சில காலம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தததாகவும் இதற்கு முன்னர் ரணிலுக்கு எதிராகவே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தாகவும் தற்போது அவருடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட அலி சப்ரி அதற்காக மொட்டுக்கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ரணிலை பற்றி தவறாகப் புரிந்து வைத்திருந்தாகவும் இணைந்து செயலாற்றும் போது பல விடயங்கள் புரிவதாகவும் பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, வெளிவிவகார கொள்கை போன்றவற்றில் ஜனாதிபதி ரணிலுக்கு விரிவான அறிவு உண்டு என்றும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுக்கு அறிவு உண்டா.மொட்டு கட்சியை விட்டு செல்லமாட்டேன். அலி சப்ரி.samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் மறுமலர்ச்சி அடைந்தே தீரும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.இலங்கையில் இப்போதிருக்கின்ற தலைவர்களுள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகச் சிறந்த தலைவர் எனவும் அவரது வேலைத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்குச் சில காலம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே ரணிலை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தததாகவும் இதற்கு முன்னர் ரணிலுக்கு எதிராகவே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தாகவும் தற்போது அவருடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட அலி சப்ரி அதற்காக மொட்டுக்கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.ரணிலை பற்றி தவறாகப் புரிந்து வைத்திருந்தாகவும் இணைந்து செயலாற்றும் போது பல விடயங்கள் புரிவதாகவும் பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, வெளிவிவகார கொள்கை போன்றவற்றில் ஜனாதிபதி ரணிலுக்கு விரிவான அறிவு உண்டு என்றும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.