சீன அரசுக்கு காணி வழங்கும் விடயத்தை ஆவணம் மூலம்
உறுதிப்படுத்துங்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்ட நிலையில்,
அதனை வழங்க முடியும் எனவும், தங்களிடம் கையளிக்க முடியாது எனவும் சிறிதரன் கூறியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறித்த விடயம் இடம்பெற்றுள்ளது.
இரணைமடு
குளத்தின் பின் பகுதியிலும், யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியிலும்
சீனாவிற்கு காணி வழங்கும் விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்
வெளியிட்டிருந்தார்.
குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா மறுத்து வந்த நிலையில், வடமராட்சி கிழக்கில் 200 ஏக்கர் காணி
வழங்கப்படுவது தொடர்பாக ஆதாரங்கள் உண்டா என சிறிதரனிடம் வினவினார்.
200
அல்ல 700 ஏக்கர் என்றும், அதற்கான கோரிக்கை ஆளுநரிடம்
விடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரணைமடு குளத்திற்கு அண்மித்த
பகுதியிலுமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதற்கான
ஆவணம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் அந்த
ஆவணத்தை நாளை யாழ்ப்பாணத்தில் தர முடியுமா என அமைச்சர் வினவினார்.
அதனை உங்களிடம் தர முடியாது என சிறிதரன் தெரிவித்துள்ளார்.
முக்கிய ஆவணத்தை கேட்ட டக்ளஸ். கொடுக்க மறுத்த சிறீதரன். சலசலப்பான அபிவிருத்தி குழு கூட்டம்.samugammedia சீன அரசுக்கு காணி வழங்கும் விடயத்தை ஆவணம் மூலம்
உறுதிப்படுத்துங்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்ட நிலையில்,
அதனை வழங்க முடியும் எனவும், தங்களிடம் கையளிக்க முடியாது எனவும் சிறிதரன் கூறியுள்ளார்.கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறித்த விடயம் இடம்பெற்றுள்ளது. இரணைமடு
குளத்தின் பின் பகுதியிலும், யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியிலும்
சீனாவிற்கு காணி வழங்கும் விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்
வெளியிட்டிருந்தார்.குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா மறுத்து வந்த நிலையில், வடமராட்சி கிழக்கில் 200 ஏக்கர் காணி
வழங்கப்படுவது தொடர்பாக ஆதாரங்கள் உண்டா என சிறிதரனிடம் வினவினார்.200
அல்ல 700 ஏக்கர் என்றும், அதற்கான கோரிக்கை ஆளுநரிடம்
விடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரணைமடு குளத்திற்கு அண்மித்த
பகுதியிலுமாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அதற்கான
ஆவணம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் அந்த
ஆவணத்தை நாளை யாழ்ப்பாணத்தில் தர முடியுமா என அமைச்சர் வினவினார்.அதனை உங்களிடம் தர முடியாது என சிறிதரன் தெரிவித்துள்ளார்.