சந்நிதியான் ஆச்சிரமத்தினால் தேசிய இளைஞர் சேவைகள்
மன்றத்தின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்டுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரமத்தினால்
ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா நிதிப்பங்களிப்பில் குழாய்கிணறு
அமைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
குடிநீர்வசதிகளை
சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கின்ற நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாண இளைஞர்
சேவைகள் மன்ற அலுவலகத்தில் இளைஞர் சேவைகள் மன்ற யாழ்மாவட்ட பணிப்பாளர்
தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சந்நிதியான்
ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர் இ.தயாபரன்
ஆகியோர் கலந்துகொண்டு குடிநீர் வசதியை அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.