• May 19 2024

நல்லூர் கோவிலுக்கு சென்ற போது மோ.சைக்கிள் மோதி படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Sep 10th 2023, 8:14 pm
image

Advertisement

நல்லூர் கோவிலுக்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நல்லூர் குறுக்கு வீதியை சேர்ந்த இரத்தினசாமி நித்தியசெல்வம் (வயது-74) என்ற ஒரு பிள்ளையின் தாயான மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 4ம் திகதி இரவு 7 மணிக்கு நல்லூர் கோவிலுக்க செல்வதற்காக யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியை கடந்த போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளாகி விழுந்து மயங்கிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்தந நிலையில் இன்று (10) அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பான மரண விசாரணையினை யாழ் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

நல்லூர் கோவிலுக்கு சென்ற போது மோ.சைக்கிள் மோதி படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு samugammedia நல்லூர் கோவிலுக்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.நல்லூர் குறுக்கு வீதியை சேர்ந்த இரத்தினசாமி நித்தியசெல்வம் (வயது-74) என்ற ஒரு பிள்ளையின் தாயான மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த 4ம் திகதி இரவு 7 மணிக்கு நல்லூர் கோவிலுக்க செல்வதற்காக யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியை கடந்த போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்துக்குள்ளாகி விழுந்து மயங்கிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு சிகிச்சை பெற்று வந்தந நிலையில் இன்று (10) அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த மரணம் தொடர்பான மரண விசாரணையினை யாழ் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement