உலகின் கோடீஸ்வரர் எலான் மஸ்க் தமது Twitter கணக்கில் மீண்டும் ஒரு வாக்கெடுப்பைத் தொடங்கியிருக்கிறார்.
இம்முறை அது Twitter நிறுவனத்தில் அவர் வகிக்கும் பதவியைச் சார்ந்தது. நான் Twitter தலைவர் பதவியிலிருந்து விலகிவிடவா? என்று அவர் கேட்டிருக்கிறார்.
வாக்கெடுப்பின் முடிவு என்னவோ அதன்படி நடக்கப்போவதாக அவர் உறுதியளித்திருக்கிறார்.
சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட அந்த வாக்கெடுப்பில் 5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
ஆம்: 58 சதவீதமும்
இல்லை: 42 சதவீதமும் வாக்களிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் Twitter கணக்கு மீதான தடையை நீக்கலாமா என்பது குறித்து மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியிருந்தார்.
டுவிட்டரில் இருந்து விலகும் எலான் மஸ்க் உலகின் கோடீஸ்வரர் எலான் மஸ்க் தமது Twitter கணக்கில் மீண்டும் ஒரு வாக்கெடுப்பைத் தொடங்கியிருக்கிறார்.இம்முறை அது Twitter நிறுவனத்தில் அவர் வகிக்கும் பதவியைச் சார்ந்தது. நான் Twitter தலைவர் பதவியிலிருந்து விலகிவிடவா என்று அவர் கேட்டிருக்கிறார்.வாக்கெடுப்பின் முடிவு என்னவோ அதன்படி நடக்கப்போவதாக அவர் உறுதியளித்திருக்கிறார்.சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட அந்த வாக்கெடுப்பில் 5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.ஆம்: 58 சதவீதமும் இல்லை: 42 சதவீதமும் வாக்களிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் Twitter கணக்கு மீதான தடையை நீக்கலாமா என்பது குறித்து மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியிருந்தார்.