நடப்பாண்டு பீபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நேற்று கத்தாரில் நடைபெற்றது.
அர்ஜெண்ட்டினா – பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்றது. இடிஹல் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 1986ஆம் ஆண்டுக்கு பின்னர் அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி தோல்வி எதிரொலியாக பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸில் வன்முறை வெடித்துள்ளது.
பாரீஸில் உள்ள Champs-Elysees இல் கூடியிருந்த ரசிகர்க அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
அப்போது ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. பாரீஸில் உள்ள Champs-Elysees இல் கூடியிருந்த ரசிகர்களை கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி அந்நாட்டு போலீஸார் கலைத்தனர்.
கலவரத்தைத் தொடர்ந்து இதுவரை 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.