• May 18 2024

விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் எரிக் சோல்ஹிம் வெளியிட்ட தகவல் SamugamMedia

Chithra / Mar 3rd 2023, 4:44 pm
image

Advertisement

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் சபையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனர் எரிக் சோல்ஹிம் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், 

கடந்த காலத்தில் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தன.

இலங்கையில் நடந்த மிகவும் சோகமான போரின் ஒரு பகுதியாக பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது மொத்த குடும்பத்துடன் இறந்துவிட்டார்.

தற்போது பிரபாகரன் உயிருடன் இல்லை.

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் - இலங்கை அரசாங்கத்திற்கு இடையேயான சமாதானப் பேச்சு வார்த்தையின் போது நான் பிரபாகரனை பலமுறை சந்தித்திருக்கிறேன்.

பிரபாகரன் இறந்துவிட்டார், அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டனர். அது மிகவும் சோகமான நிகழ்வு. தற்போது இலங்கை எதிர்காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.

சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றாக இணைந்து வாழ விரும்புகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் - இலங்கை அரசாங்கத்திற்கு இடையே போர் நடைபெற்ற காலத்தில் எரிக் சோல்ஹிம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் எரிக் சோல்ஹிம் வெளியிட்ட தகவல் SamugamMedia தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் சபையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனர் எரிக் சோல்ஹிம் தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தன.இலங்கையில் நடந்த மிகவும் சோகமான போரின் ஒரு பகுதியாக பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது மொத்த குடும்பத்துடன் இறந்துவிட்டார்.தற்போது பிரபாகரன் உயிருடன் இல்லை.இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் - இலங்கை அரசாங்கத்திற்கு இடையேயான சமாதானப் பேச்சு வார்த்தையின் போது நான் பிரபாகரனை பலமுறை சந்தித்திருக்கிறேன்.பிரபாகரன் இறந்துவிட்டார், அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டனர். அது மிகவும் சோகமான நிகழ்வு. தற்போது இலங்கை எதிர்காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றாக இணைந்து வாழ விரும்புகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் - இலங்கை அரசாங்கத்திற்கு இடையே போர் நடைபெற்ற காலத்தில் எரிக் சோல்ஹிம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement