தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை வி.வசந்தா உடல்நல பிரச்சனையால் 82வது வயதில் நேற்றையதினம் காலமானார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தென்னிந்திய திரையுலகம் இவ்வருடம் பல முக்கிய திரைப் பிரபலங்களின் மறைவால் துயரத்தில் மூழ்கியுள்ளது.
அந்தவகையில் காமெடி நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா, பிரபல இயக்குநர் டிபி கஜேந்திரன் ஆகியோரது இழப்புக்கள் ஏற்படுத்திய சோகத்தில் இருந்தே மீள முடியாத தருணத்தில், தற்போது பழம்பெரும் நடிகை வி. வசந்தாவின் மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழம்பெரும் நடிகையான வி. வசந்தா, எம்.கே.தியாகராஜ பாகவதர் நாடக குழுவில் தான் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார்.
இவர் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்த 'இரவும் பகலும்' என்ற திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் அசோகனுக்கு ஜோடியாக கார்த்திகை தீபம் என்ற படத்தில் நடித்தார்.
அது மட்டுமின்றி, நடிகை வி.வசந்தா, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த 'ராணுவ வீரன்' என்ற படத்தில் அவருடைய தாயாகவும்,மூன்றாம் பிறை திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்கும் தாயாராகவும் நடித்துள்ளார். தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் 100க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார்.
வயது மூப்பு காரணமாக நடிகை வி.வசந்தாவுக்கு அண்மைகாலமாகவே சில உடல்நல பிரச்சனைகள் இருந்துள்ளன.
இந்நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று(19) மதியம் 03.30 மணியளவில் காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று(20) மதியம் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகை திடீர் மரணம். சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.samugammedia தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை வி.வசந்தா உடல்நல பிரச்சனையால் 82வது வயதில் நேற்றையதினம் காலமானார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தென்னிந்திய திரையுலகம் இவ்வருடம் பல முக்கிய திரைப் பிரபலங்களின் மறைவால் துயரத்தில் மூழ்கியுள்ளது.அந்தவகையில் காமெடி நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா, பிரபல இயக்குநர் டிபி கஜேந்திரன் ஆகியோரது இழப்புக்கள் ஏற்படுத்திய சோகத்தில் இருந்தே மீள முடியாத தருணத்தில், தற்போது பழம்பெரும் நடிகை வி. வசந்தாவின் மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழம்பெரும் நடிகையான வி. வசந்தா, எம்.கே.தியாகராஜ பாகவதர் நாடக குழுவில் தான் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்த 'இரவும் பகலும்' என்ற திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் அசோகனுக்கு ஜோடியாக கார்த்திகை தீபம் என்ற படத்தில் நடித்தார். அது மட்டுமின்றி, நடிகை வி.வசந்தா, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த 'ராணுவ வீரன்' என்ற படத்தில் அவருடைய தாயாகவும்,மூன்றாம் பிறை திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்கும் தாயாராகவும் நடித்துள்ளார். தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் 100க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார். வயது மூப்பு காரணமாக நடிகை வி.வசந்தாவுக்கு அண்மைகாலமாகவே சில உடல்நல பிரச்சனைகள் இருந்துள்ளன. இந்நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று(19) மதியம் 03.30 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று(20) மதியம் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.