பிரபல நடிகர் ஜூனியர் பாலையா இன்று(02) அதிகாலை உயிரிழந்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக இருந்த பாலையாவின் மூன்றாவது மகனே ஜூனியர் பாலையா ஆவார்.
1975ம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம் ஜூனியர் பாலையா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து கரகாட்டக்காரன், சுந்தரகாண்டம், சாட்டை,அமராவதி, கோபுர வாசலிலே, கும்கி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஜூனியர் பாலையாவிற்கு இன்று அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
மறைந்த மூத்த நடிகரான ஜூனியர் பாலையாவின் உடலுக்கு திரையுலகினர் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்படுகின்றது.