• May 19 2024

13வது நாளாக தொடரும் மயிலத்தமடு பண்ணையாளர்களின் போராட்டம்...!ஜனாதிபதியை தலையிட்டு தீர்க்குமாறு கோரிக்கை...!samugammedia

Sharmi / Sep 27th 2023, 10:18 pm
image

Advertisement

தமது மேய்ச்சல் தரை காணி பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு தமக்கான தீர்வினை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி 13வது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15) காலை முதல் போராட்டத்தில் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய தினமும் 13வது நாள் போராட்டமும் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்தி தமது மேய்ச்சல் தரை காணிகளை மீட்டுத்தர ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


13வது நாளாக தொடரும் மயிலத்தமடு பண்ணையாளர்களின் போராட்டம்.ஜனாதிபதியை தலையிட்டு தீர்க்குமாறு கோரிக்கை.samugammedia தமது மேய்ச்சல் தரை காணி பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு தமக்கான தீர்வினை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி 13வது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15) காலை முதல் போராட்டத்தில் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்றைய தினமும் 13வது நாள் போராட்டமும் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்தி தமது மேய்ச்சல் தரை காணிகளை மீட்டுத்தர ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement