• May 18 2024

ரம்புக்கனை கொட்டகம சந்தியில் துப்பாக்கி சூடு..! சுட்டது பொலிஸார்..! samugammedia

Sharmi / Jun 14th 2023, 9:42 am
image

Advertisement

இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போலகம மற்றும் கொட்டகம சந்தியில் , பொலிஸ் உத்தியோகத்தர்களினால் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைக்கு அருகில் உத்தரவை மீறிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் இடது கை மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஹிரிவடுன்ன, ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளார்.

சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரம்புக்கனை கொட்டகம சந்தியில் துப்பாக்கி சூடு. சுட்டது பொலிஸார். samugammedia இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போலகம மற்றும் கொட்டகம சந்தியில் , பொலிஸ் உத்தியோகத்தர்களினால் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைக்கு அருகில் உத்தரவை மீறிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.துப்பாக்கிச் சூடு காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் இடது கை மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் ஹிரிவடுன்ன, ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளார்.சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement