பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து ஆழ் கடல் மீன்பிடிப்படகில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று சனிக்கிழமை பருத்தித்துறை துறைமுக கடலில் இருந்து மீன்பிடிப்பதற்காக சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்பவரே நடுக்கடலில் தவறி வீழ்ந்தது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் படகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.