• May 18 2024

இலங்கைக்கு கடத்தவிருந்த ஆடைகள் பறிமுதல் - 5 பேர் கைது! samugammedia

Chithra / Jun 14th 2023, 12:46 pm
image

Advertisement

இராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக குற்றப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து மாவட்ட பொலிஸ் அதிகாரி தங்கதுரை உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு பொலிஸார் இணைந்து குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினம் கடற்கரை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி கொண்டுவரப்பட்டு மீன்பிடிபடகில் ஏற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட பொதி ஒன்றை பொலிஸார் கைப்பற்றி சோதனை செய்தனர்.

அந்த பொதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் காற்சட்டை, டீ சர்ட், நைட்டி குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட பலவிதமான ஆடைகள் இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அந்த ஆடைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்த இராமேசுவரம் வடக்கு தெருவை சேர்ந்த எஸ்ரா (வயது 24), அக்காள் மடம் பகுதியை சேர்ந்த ஜெரோன்(37), ரக்சித்ராஜ்(38), தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த நாகூர்கனி(44), சூசையப்பர்பட்டினம் இருதயராஜ்(32) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலை, பீடி கட்டு மஞ்சள், கடல் அட்டை பலவிதமான போதைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இலங்கைக்கு கடத்த இருந்த பலவிதமான துணிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


இலங்கைக்கு கடத்தவிருந்த ஆடைகள் பறிமுதல் - 5 பேர் கைது samugammedia இராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக குற்றப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து மாவட்ட பொலிஸ் அதிகாரி தங்கதுரை உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு பொலிஸார் இணைந்து குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினம் கடற்கரை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி கொண்டுவரப்பட்டு மீன்பிடிபடகில் ஏற்றுவதற்காக கொண்டுவரப்பட்ட பொதி ஒன்றை பொலிஸார் கைப்பற்றி சோதனை செய்தனர்.அந்த பொதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் காற்சட்டை, டீ சர்ட், நைட்டி குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட பலவிதமான ஆடைகள் இருப்பது தெரிய வந்தது.தொடர்ந்து அந்த ஆடைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்த இராமேசுவரம் வடக்கு தெருவை சேர்ந்த எஸ்ரா (வயது 24), அக்காள் மடம் பகுதியை சேர்ந்த ஜெரோன்(37), ரக்சித்ராஜ்(38), தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த நாகூர்கனி(44), சூசையப்பர்பட்டினம் இருதயராஜ்(32) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுவரை இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலை, பீடி கட்டு மஞ்சள், கடல் அட்டை பலவிதமான போதைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இலங்கைக்கு கடத்த இருந்த பலவிதமான துணிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement