• May 12 2024

நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்- ஒட்டன்சத்திரம் அருகே கோர விபத்து: நான்கு பேர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / May 29th 2023, 12:48 pm
image

Advertisement

ஒட்டன்சத்திரம் அருகே நேற்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர் சாலையில் சீத்தப்பட்டியை சேர்ந்த ரத்தினம், அவரது நண்பர் சேகர் ஆகியோர் டூவீலரில் ஒட்டன்சத்திரத்திலிருந்து சென்றுள்ளனர். இதே போல் ரெட்டியார் சத்திரம் பகுதியை சேர்ந்த சுதாகர், தென்னம்பட்டியை சேர்ந்த துரைராஜ் ஆகியோர் வேடசந்தூரில் இருந்து டூவிலரில் வந்துள்ளனர்.

இவர்கள் இருவரது டூவீலர்களும் கொல்லப்பட்டி அருகே வந்த போது நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ரத்தினம், சேகர், சுதாகர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த துரைராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் விபத்தை கண்ட லாரி டிரைவர் தனது லாரியினை அங்கே நிறுத்தியுள்ளார். நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டூவீலரில் வந்த சீத்தமரம் நால்ரோடு பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் மோதி காயமடைந்தார். அவரை மீட்ட போலீஸார், பிரவீன்குமாரை திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தக் கோர விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஒட்டன்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்- ஒட்டன்சத்திரம் அருகே கோர விபத்து: நான்கு பேர் உயிரிழப்பு samugammedia ஒட்டன்சத்திரம் அருகே நேற்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர் சாலையில் சீத்தப்பட்டியை சேர்ந்த ரத்தினம், அவரது நண்பர் சேகர் ஆகியோர் டூவீலரில் ஒட்டன்சத்திரத்திலிருந்து சென்றுள்ளனர். இதே போல் ரெட்டியார் சத்திரம் பகுதியை சேர்ந்த சுதாகர், தென்னம்பட்டியை சேர்ந்த துரைராஜ் ஆகியோர் வேடசந்தூரில் இருந்து டூவிலரில் வந்துள்ளனர்.இவர்கள் இருவரது டூவீலர்களும் கொல்லப்பட்டி அருகே வந்த போது நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ரத்தினம், சேகர், சுதாகர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த துரைராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்நிலையில் விபத்தை கண்ட லாரி டிரைவர் தனது லாரியினை அங்கே நிறுத்தியுள்ளார். நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டூவீலரில் வந்த சீத்தமரம் நால்ரோடு பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் மோதி காயமடைந்தார். அவரை மீட்ட போலீஸார், பிரவீன்குமாரை திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தக் கோர விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஒட்டன்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement