வட்ஸ்அப் குழுக்களில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர ஆயத்த குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதுதொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் முன்னணி தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவிக்கையில்,
இந்த மோசடிகள் நன்கு அறியப்பட்ட வர்த்தக நாமங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை சுரண்டுகின்றன.
மோசடி நடவடிக்கைகளில் தனிநபர்களின் வாட்ஸ்அப் எண்களை அவர்களின் அனுமதியின்றி குழுக்களில் சேர்ப்பது என்பது இதில் பிரதான காரணங்களில் ஒன்றாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.