கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
உலகக் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் தற்போது தொடங்கி உள்ளது.
இதில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதி வருகின்றன.
உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு டீ கடை உரிமையாளர் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை ஆதரிப்பவர்களுக்கு இலவசமாக டீ வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அந்த கடையில் உள்ள இலவச டீ குறித்த அறிவிப்பு கார்டுக்கு அருகே பெண் ஒருவர் புன்னகையுடன் நிற்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு ஏராளமானோர் ஆதரவளித்துள்ளனர்.
அர்ஜென்டினாவுக்கு ஆதரவு தெரிவிப்போருக்கு டீ இலவசம் கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. உலகக் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இதில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதி வருகின்றன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் ரசித்து வருகின்றனர்.இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு டீ கடை உரிமையாளர் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை ஆதரிப்பவர்களுக்கு இலவசமாக டீ வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்த கடையில் உள்ள இலவச டீ குறித்த அறிவிப்பு கார்டுக்கு அருகே பெண் ஒருவர் புன்னகையுடன் நிற்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ஏராளமானோர் ஆதரவளித்துள்ளனர்.