தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்ய அழைத்து வரப்பட்டுள்ளார்.
மருதங்கேணி பகுதியில் பரீட்சை ஒழுங்குபடுத்தல் மண்டப வளாகத்தில் கடமையிலிருந்த பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் தனது பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமை தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி கைது செய்யும் நடவடிக்கையை தடுக்க முற்பட்ட போதிலும் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்ய அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.