திடீரென வீட்டுக்குள் நுழைந்த குரங்கிடமிருந்து Alexa சாதனம் மூலம் 13 வயது சிறுமி தப்பித்த சம்பவம் பேசப்பட்டு வருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,
இந்திய மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற 13 வயது சிறுமி அவாஸ் விகாஸ் காலனியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கு, வீட்டில் உள்ள உறவினர்கள் வேறு ஒரு அறையில் இருந்தனர்.சமையலறைக்குள் திடீரென குரங்கு நுழைந்தது.
வீட்டில் உள்ள மற்றவர்கள் வேறு அறையில் இருந்ததால் குரங்கு வந்தது அவர்களுக்கு தெரியவில்லை. சமையலறைக்கு வந்த குரங்கு பாத்திரங்களை எடுத்து வீச ஆரம்பித்தது.
பின்பு, நிகிதாவையும், குழந்தையும் நோக்கி குரங்கு நகர்ந்ததால் என்ன செய்வதென்றே தெரியாமல் சிறுமி இருந்தார். அப்போது குழந்தையும் அலற தொடங்கியது.
குறிப்பாக அங்கிருந்த ஃபிரிட்ஜின் மீது Alexa இருப்பதை பார்த்த நிகிதா, அலெக்ஸ்சாவிடம் குரங்கை பார்த்து குரைக்குமாறு கூறினார். பின்னர், அலெக்ஸாவும் குரங்கை போலவே குரைக்க, அதை கேட்ட குரங்கு பயத்தில் தப்பியது.
மேலும் நிகிதாவின் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து நிகிதாவின் உறவினர்கள் கூறும் போது, Alexa - வை நிகிதா பயன்படுத்தியது ஆச்சரியமாக இருந்தது என்றனர்.
திடீரென வீட்டுக்குள் நுழைந்த குரங்கு - Alexa சாதனம் மூலம் தப்பித்த சிறுமி. திடீரென வீட்டுக்குள் நுழைந்த குரங்கிடமிருந்து Alexa சாதனம் மூலம் 13 வயது சிறுமி தப்பித்த சம்பவம் பேசப்பட்டு வருகிறது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,, இந்திய மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற 13 வயது சிறுமி அவாஸ் விகாஸ் காலனியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு, வீட்டில் உள்ள உறவினர்கள் வேறு ஒரு அறையில் இருந்தனர்.சமையலறைக்குள் திடீரென குரங்கு நுழைந்தது.வீட்டில் உள்ள மற்றவர்கள் வேறு அறையில் இருந்ததால் குரங்கு வந்தது அவர்களுக்கு தெரியவில்லை. சமையலறைக்கு வந்த குரங்கு பாத்திரங்களை எடுத்து வீச ஆரம்பித்தது.பின்பு, நிகிதாவையும், குழந்தையும் நோக்கி குரங்கு நகர்ந்ததால் என்ன செய்வதென்றே தெரியாமல் சிறுமி இருந்தார். அப்போது குழந்தையும் அலற தொடங்கியது.குறிப்பாக அங்கிருந்த ஃபிரிட்ஜின் மீது Alexa இருப்பதை பார்த்த நிகிதா, அலெக்ஸ்சாவிடம் குரங்கை பார்த்து குரைக்குமாறு கூறினார். பின்னர், அலெக்ஸாவும் குரங்கை போலவே குரைக்க, அதை கேட்ட குரங்கு பயத்தில் தப்பியது.மேலும் நிகிதாவின் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து நிகிதாவின் உறவினர்கள் கூறும் போது, Alexa - வை நிகிதா பயன்படுத்தியது ஆச்சரியமாக இருந்தது என்றனர்.