சமுர்த்தி பயனாளிகள் உட்பட 2 மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு, மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
குறைந்த வருமானம் பெறுவோரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக 61,600 மெட்ரிக்தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.