• May 13 2024

யாழ். ஆழியவளையில் கரையொதுங்கிய சடலம்

Chithra / Dec 21st 2022, 2:54 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் வடமராட்சி - ஆழியவளை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (21) பிற்பகல் வேளையில் இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

சடலத்தின் தலைப்பகுதியில் மண்டையோடு மட்டுமே எஞ்சியுள்ளதால் அடையாளம் காண சிரமமாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். ஆழியவளையில் கரையொதுங்கிய சடலம் யாழ்ப்பாணம் வடமராட்சி - ஆழியவளை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று (21) பிற்பகல் வேளையில் இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது.குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.சடலத்தின் தலைப்பகுதியில் மண்டையோடு மட்டுமே எஞ்சியுள்ளதால் அடையாளம் காண சிரமமாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement