• May 03 2024

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளைத் திருடி ,யாழில் சங்கிலி அறுத்த கில்லாடி சிக்கினார்

harsha / Dec 8th 2022, 10:50 am
image

Advertisement

கிளிநொச்சியை சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவருடைய மோட்டார் சைக்கிளை திருடி யாழ்.கோப்பாய் பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டிருந்த நபர் சாவகச்சோி பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

நேற்றுமுன்தினம் கோப்பாய் பகுதியில் வீதியால் பயணித்த பெண் ஒருவருடைய சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் சாவகச்சோி பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


சந்தேகநபர் கிளிநொச்சி - பரந்தன் பகுதியை சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவருடைய மோட்டார் சைக்கிளை திருடி அதனை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டமை தொியவந்துள்ளது.

எனவே வாகன இலக்கத்தை வைத்தே சந்தேகநபரை பொலிஸார் மடக்கியுள்ளனர். யாழ்.இளவாலை பகுதியை சேர்ந்த 25 வயதான குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளைத் திருடி ,யாழில் சங்கிலி அறுத்த கில்லாடி சிக்கினார் கிளிநொச்சியை சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவருடைய மோட்டார் சைக்கிளை திருடி யாழ்.கோப்பாய் பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டிருந்த நபர் சாவகச்சோி பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். நேற்றுமுன்தினம் கோப்பாய் பகுதியில் வீதியால் பயணித்த பெண் ஒருவருடைய சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் சாவகச்சோி பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேகநபர் கிளிநொச்சி - பரந்தன் பகுதியை சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவருடைய மோட்டார் சைக்கிளை திருடி அதனை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டமை தொியவந்துள்ளது. எனவே வாகன இலக்கத்தை வைத்தே சந்தேகநபரை பொலிஸார் மடக்கியுள்ளனர். யாழ்.இளவாலை பகுதியை சேர்ந்த 25 வயதான குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement