• May 02 2024

துவரம் பருப்பில் இருக்கும் முக்கிய நன்மைகள் இதோ!

Tamil nila / Dec 1st 2022, 6:56 pm
image

Advertisement

துவரம்பருப்பு சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. உடல் எடை குறைவதுடன் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தலாம். 


புரதச்சத்து கொண்ட உணவுப் பொருட்களில் முக்கியமானது பருப்பு. சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் தேவையான பருப்பு வகைகள், நமது உடலுக்கு மிகவும் தேவைப்படும் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாகும். பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பருப்புகளில் காணப்படுகின்றன. இது உடலை பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து காப்பதோடு, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் உதவும். அதிலும் துவரம்பருப்பு சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. இதனை உட்கொள்வதால் உடல் எடை குறைவதுடன் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தலாம்.


துவரம் பருப்பில் சோடியம், நார்ச்சத்து, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், மெக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த பருப்பை நாம், காலை, மதியம், இரவு என எப்போது வேண்டுமானாலும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம், நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், இந்த பருப்பை உட்கொள்வது உங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதன் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.


துவரம் பருப்பு வழக்கமாக நமது சமையலில் சேர்க்கப்பட்டாலும், ஆனால் அதில் பல நன்மைகள் உள்ளன என்பது சரியாகத் தெரியுமா என்றால் இல்லை என்றே சொல்லலாம். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்த உதவுகிறது துவரை என்பது உங்களுக்குத் தெரியுமா?.


பிபியைக் கட்டுப்படுத்தவும் உதவும் துவரம் பருப்பில் பொட்டாசியம் அதிகம் உள்ளது, இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு இதய நோய் ஏற்படும் அபாயமும் இருக்கலாம். எனவே அவர்கள் துவரம் பருப்பை தினசரி அடிப்படையில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.



நீரிழிவு நோயாளிகளுக்கும், துவரம்பருப்ப்பு நன்மை பயக்கும். பொட்டாசியம் உள்ளதால், இந்த பருப்பு, இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயால் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே இந்த பருப்பை உட்கொள்ள வேண்டும்.


 செரிமான அமைப்பை பலப்படுத்தும் துவரம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இதன் காரணமாக உணவை எளிதில் ஜீரணிக்க முடியும். இந்த பருப்பை உட்கொள்வதால் வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் எழாது. இருந்தாலும் துவரம் பருப்பு சமைக்கும்போது அதில் பெருங்காயத்தைச் சேர்த்து கொண்டால் அதன் பயன்கள் அதிகரிகும்.



கர்ப்பிணிப் பெண்களுக்கு துவரம்பருப்பு பல நன்மைகளைக் கொடுக்கிறது. இதில் உள்ள ஃபோலிக் அமிலம், கருவில் உள்ல குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கருவுற்ற பெண்ணுக்கு தேவையான சத்துக்களையும் துவரம்பருப்பு வழங்குகிறது.


துவரம் பருப்பை சாப்பிடுவதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். இதில் நிறைய புரதச் சத்து உள்ளது, எனவே, துவரம் பருப்பால் செய்த உணவை சாப்பிட்ட பிறகு வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும், அதனால் பசி எடுக்காது. மேலும் இந்த பருப்பில் இருந்து உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

துவரம் பருப்பில் இருக்கும் முக்கிய நன்மைகள் இதோ துவரம்பருப்பு சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. உடல் எடை குறைவதுடன் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தலாம். புரதச்சத்து கொண்ட உணவுப் பொருட்களில் முக்கியமானது பருப்பு. சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் தேவையான பருப்பு வகைகள், நமது உடலுக்கு மிகவும் தேவைப்படும் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாகும். பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பருப்புகளில் காணப்படுகின்றன. இது உடலை பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து காப்பதோடு, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் உதவும். அதிலும் துவரம்பருப்பு சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. இதனை உட்கொள்வதால் உடல் எடை குறைவதுடன் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தலாம்.துவரம் பருப்பில் சோடியம், நார்ச்சத்து, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், மெக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த பருப்பை நாம், காலை, மதியம், இரவு என எப்போது வேண்டுமானாலும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம், நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், இந்த பருப்பை உட்கொள்வது உங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதன் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.துவரம் பருப்பு வழக்கமாக நமது சமையலில் சேர்க்கப்பட்டாலும், ஆனால் அதில் பல நன்மைகள் உள்ளன என்பது சரியாகத் தெரியுமா என்றால் இல்லை என்றே சொல்லலாம். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்த உதவுகிறது துவரை என்பது உங்களுக்குத் தெரியுமா.பிபியைக் கட்டுப்படுத்தவும் உதவும் துவரம் பருப்பில் பொட்டாசியம் அதிகம் உள்ளது, இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு இதய நோய் ஏற்படும் அபாயமும் இருக்கலாம். எனவே அவர்கள் துவரம் பருப்பை தினசரி அடிப்படையில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.நீரிழிவு நோயாளிகளுக்கும், துவரம்பருப்ப்பு நன்மை பயக்கும். பொட்டாசியம் உள்ளதால், இந்த பருப்பு, இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயால் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே இந்த பருப்பை உட்கொள்ள வேண்டும். செரிமான அமைப்பை பலப்படுத்தும் துவரம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இதன் காரணமாக உணவை எளிதில் ஜீரணிக்க முடியும். இந்த பருப்பை உட்கொள்வதால் வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் எழாது. இருந்தாலும் துவரம் பருப்பு சமைக்கும்போது அதில் பெருங்காயத்தைச் சேர்த்து கொண்டால் அதன் பயன்கள் அதிகரிகும்.கர்ப்பிணிப் பெண்களுக்கு துவரம்பருப்பு பல நன்மைகளைக் கொடுக்கிறது. இதில் உள்ள ஃபோலிக் அமிலம், கருவில் உள்ல குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கருவுற்ற பெண்ணுக்கு தேவையான சத்துக்களையும் துவரம்பருப்பு வழங்குகிறது.துவரம் பருப்பை சாப்பிடுவதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். இதில் நிறைய புரதச் சத்து உள்ளது, எனவே, துவரம் பருப்பால் செய்த உணவை சாப்பிட்ட பிறகு வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும், அதனால் பசி எடுக்காது. மேலும் இந்த பருப்பில் இருந்து உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

Advertisement

Advertisement

Advertisement