தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தெனியாய, அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தென் மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
நில்வலா ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில், தாழ் நிலப் பகுதிகளில் மேலும் வெள்ள பெருக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் தாழ் நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை மோசமான வானிலை காரணமாக பாடசாலைகளை மூடுவது குறித்து தீர்மானிக்க வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு விடுமுறை. தற்போது வெளியான முக்கிய அறிவிப்பு samugammedia தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இதன்படி, தெனியாய, அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.தென் மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இதேவேளை, தென் மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.நில்வலா ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில், தாழ் நிலப் பகுதிகளில் மேலும் வெள்ள பெருக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.குறித்த பகுதிகளில் தாழ் நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.இதேவேளை மோசமான வானிலை காரணமாக பாடசாலைகளை மூடுவது குறித்து தீர்மானிக்க வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.