• May 18 2024

முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழி..!அரசாங்கம் தடயங்களை அழிப்பதற்கு முயற்சி...!samugammedia

Sharmi / Jul 7th 2023, 12:46 pm
image

Advertisement

முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழிகள் தொடர்பில் அரசாங்கம் தடயங்களை அழிப்பதற்கு முயற்சிக்கலாம் என்றும் அந்த விடயத்தில் நீதியினை பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் உதவி செய்ய  வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா தனரன்சினி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

இன்றுடன் 2, 390 ஆவது நாளாக பல இன்னல்களிற்கு மத்தியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்காக தெருவிலே நின்று போராடி வருகின்றோம்.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காணாமல்போனோர்  அலுவலகம் இன்று வரை தனது பணியை செவ்வனே செய்து முடிக்கவில்லை. ஆயினும், ஜெனிவா கூட்டத் தொடர் வருகின்ற காலப் பகுதிகளில்  தாமும் வேலை செய்வதாகவும், அவர்களது விபரங்களை பெற்று மக்களிற்கு தாம் பதிலளிப்பதாக காட்டுவதற்காக தமது பணிகளை மும்முரமாக வெளிக்காட்டுகின்றனர்.

நாளைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஓ.எம்.பி. அலுவலகம் வந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களை அழைத்து அதற்கான பரிகாரம் வழங்கப் போவதாக அறிய முடிகின்றது.

நாம் பல மாவட்டங்களில், பல இடங்களில் மற்றும் பல காலங்களில்  ஓ.எம்.பி. அலுவலகத்தினை எதிர்த்து நின்றோம். அதாவது மாவட்ட ரீதியாக அவர்கள் எந்தவிதமான செயற்படுகளையும் செய்யாதவாறு எதிர்த்தோம்.

இன்றும் நாம்   ஓ.எம்.பி.அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அந்த அலுவலகத்தின் ஊடாகவோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவோ தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பதால் தான் 38 ஆவது கூட்டத்தொடரில் இருந்து இன்று வரை ஜெனிவாவில் உண்மையான குரலினை பதிவு செய்து வருகின்றோம்.

 ஓ.எம்.பி.அலுவலகம் அரசாங்கத்தை காப்பாற்ற முனையாது விலகி கொள்ள வேண்டும். அரசாங்கத்துடன் சார்ந்து அரச சம்பளம் வாங்கும் மாவட்ட செயலகமாக இருப்பினும் அல்லது பிரதேச செயலகமாக இருப்பினும் அங்கே பணிபுரிபவர்களால்  கூட அந்த பதவிகளில் இருப்பதால், எமது உறவுகளின் உயிர்களிற்கு என்ன நடந்தது? என்று கேட்க முடியாமல் உள்ளனர்.

ஆனால், அரசாங்கத்திற்கு சார்பாக வேலை செய்வதற்கு மக்களிடம் வருகின்றனர். மக்களின் பணிகளை சரியாக செய்வதில்லை. தமது தேவைகளிற்காக செல்லும் மக்களை இருக்க வைத்து விட்டு அவர்கள் தொலைபேசியுடன் இருப்பார்கள்.  

ஆனால், ஓ.எம்.பி.அலுவலகம் என்றவுடன் அங்கு வழங்கப்படும் மைலோ ஜூஸிற்கும், சிறுண்டிக்குமாக வேலை செய்வதை கண்டிக்கிறோம்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது கல்வி தராதரத்தினை சரியாக பயன்படுத்தல் வேண்டும். ஒரு சில அதிகாரிகள் தமது பிள்ளைகள் பற்றிய செய்திகள் எப்பொழுது வரும் என்று ஏக்கத்துடன் இருக்கும் தாய்மார்களை சொத்து இழப்பீடு என்று கூறி ஓ.எம்.பி.அலுவலகத்தினுள் விட்டு அவை தொடர்பாக விசாரிப்பதாக எத்தினை பேர் கொல்லப்பட்டனர் என்று தமக்கு வேண்டிய விபரங்களை தந்திரமாக எடுத்து கையெழுத்தினை வாங்குகின்றனர்.

எமது கண்ணீர் சும்மா விட மாட்டாது. இதன் மூலம் நிறைய பேர் அனுபவித்துள்ளனர். இவர்களும் இவ்வாறான வேலைகளை செய்ய முன்வந்தால் தாய்மார்களின் கண்ணீர் இவர்களையும் சும்மா விட மாட்டாது.

முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழிகள் எங்கிருந்து வந்தன? யாரால் ஆக்கப்பட்டது? அதனை இல்லது ஒழிப்பதற்கு அகழ்வுகள் நடப்பதுதான் அரச படைகளுமிணைந்து அந்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த அகழ்வுகள் நீதியான முறையில் இடம்பெறுதல் வேண்டும். லட்ச கணக்கில் எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கையளிக்கப்பட்ட உறவுகளிற்கு என்ன நடந்தது என்று கூற முடியாது அரசு தவிர்த்து வருவதுடன் அரசாங்கத்தினால் ஜெனிவா மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் உள்ளது.

ஆகவே, அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் நாடுகளை ஏமாற்றும் நோக்கில் இந்த தடயங்களை அழிக்கலாம். ஆகவே புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி மனித நேயத்துடன் உள்ள அனைத்து உலக நாடுகளும் இவை குறித்த உண்மையினை அறிய உதவ வேண்டும் என கேட்டு கொள்வதாகவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழி.அரசாங்கம் தடயங்களை அழிப்பதற்கு முயற்சி.samugammedia முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழிகள் தொடர்பில் அரசாங்கம் தடயங்களை அழிப்பதற்கு முயற்சிக்கலாம் என்றும் அந்த விடயத்தில் நீதியினை பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் உதவி செய்ய  வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா தனரன்சினி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், இன்றுடன் 2, 390 ஆவது நாளாக பல இன்னல்களிற்கு மத்தியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்காக தெருவிலே நின்று போராடி வருகின்றோம். 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காணாமல்போனோர்  அலுவலகம் இன்று வரை தனது பணியை செவ்வனே செய்து முடிக்கவில்லை. ஆயினும், ஜெனிவா கூட்டத் தொடர் வருகின்ற காலப் பகுதிகளில்  தாமும் வேலை செய்வதாகவும், அவர்களது விபரங்களை பெற்று மக்களிற்கு தாம் பதிலளிப்பதாக காட்டுவதற்காக தமது பணிகளை மும்முரமாக வெளிக்காட்டுகின்றனர். நாளைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஓ.எம்.பி. அலுவலகம் வந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களை அழைத்து அதற்கான பரிகாரம் வழங்கப் போவதாக அறிய முடிகின்றது. நாம் பல மாவட்டங்களில், பல இடங்களில் மற்றும் பல காலங்களில்  ஓ.எம்.பி. அலுவலகத்தினை எதிர்த்து நின்றோம். அதாவது மாவட்ட ரீதியாக அவர்கள் எந்தவிதமான செயற்படுகளையும் செய்யாதவாறு எதிர்த்தோம். இன்றும் நாம்   ஓ.எம்.பி.அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அந்த அலுவலகத்தின் ஊடாகவோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவோ தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பதால் தான் 38 ஆவது கூட்டத்தொடரில் இருந்து இன்று வரை ஜெனிவாவில் உண்மையான குரலினை பதிவு செய்து வருகின்றோம்.  ஓ.எம்.பி.அலுவலகம் அரசாங்கத்தை காப்பாற்ற முனையாது விலகி கொள்ள வேண்டும். அரசாங்கத்துடன் சார்ந்து அரச சம்பளம் வாங்கும் மாவட்ட செயலகமாக இருப்பினும் அல்லது பிரதேச செயலகமாக இருப்பினும் அங்கே பணிபுரிபவர்களால்  கூட அந்த பதவிகளில் இருப்பதால், எமது உறவுகளின் உயிர்களிற்கு என்ன நடந்தது என்று கேட்க முடியாமல் உள்ளனர். ஆனால், அரசாங்கத்திற்கு சார்பாக வேலை செய்வதற்கு மக்களிடம் வருகின்றனர். மக்களின் பணிகளை சரியாக செய்வதில்லை. தமது தேவைகளிற்காக செல்லும் மக்களை இருக்க வைத்து விட்டு அவர்கள் தொலைபேசியுடன் இருப்பார்கள்.  ஆனால், ஓ.எம்.பி.அலுவலகம் என்றவுடன் அங்கு வழங்கப்படும் மைலோ ஜூஸிற்கும், சிறுண்டிக்குமாக வேலை செய்வதை கண்டிக்கிறோம். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது கல்வி தராதரத்தினை சரியாக பயன்படுத்தல் வேண்டும். ஒரு சில அதிகாரிகள் தமது பிள்ளைகள் பற்றிய செய்திகள் எப்பொழுது வரும் என்று ஏக்கத்துடன் இருக்கும் தாய்மார்களை சொத்து இழப்பீடு என்று கூறி ஓ.எம்.பி.அலுவலகத்தினுள் விட்டு அவை தொடர்பாக விசாரிப்பதாக எத்தினை பேர் கொல்லப்பட்டனர் என்று தமக்கு வேண்டிய விபரங்களை தந்திரமாக எடுத்து கையெழுத்தினை வாங்குகின்றனர்.எமது கண்ணீர் சும்மா விட மாட்டாது. இதன் மூலம் நிறைய பேர் அனுபவித்துள்ளனர். இவர்களும் இவ்வாறான வேலைகளை செய்ய முன்வந்தால் தாய்மார்களின் கண்ணீர் இவர்களையும் சும்மா விட மாட்டாது. முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழிகள் எங்கிருந்து வந்தன யாரால் ஆக்கப்பட்டது அதனை இல்லது ஒழிப்பதற்கு அகழ்வுகள் நடப்பதுதான் அரச படைகளுமிணைந்து அந்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அகழ்வுகள் நீதியான முறையில் இடம்பெறுதல் வேண்டும். லட்ச கணக்கில் எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கையளிக்கப்பட்ட உறவுகளிற்கு என்ன நடந்தது என்று கூற முடியாது அரசு தவிர்த்து வருவதுடன் அரசாங்கத்தினால் ஜெனிவா மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் உள்ளது. ஆகவே, அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் நாடுகளை ஏமாற்றும் நோக்கில் இந்த தடயங்களை அழிக்கலாம். ஆகவே புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி மனித நேயத்துடன் உள்ள அனைத்து உலக நாடுகளும் இவை குறித்த உண்மையினை அறிய உதவ வேண்டும் என கேட்டு கொள்வதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement