• May 10 2024

முதுகெலும்பு இருக்கும்வரை அரசியலில் ஈடுபடுவேன்...! மைத்திரி திட்டவட்டம்...!samugammedia

Sharmi / Oct 13th 2023, 3:32 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான்  தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முக்கிய அரசியல் கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் மைத்திரிபால சிறிசேனவின் இந்த அறிவிப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மைத்திரிபால சிறிசேன,

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுமானால் அதனை ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன்.

அதேவேளை கடந்த 2015 இல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றேன். எனினும் எனக்கு தேவையானவற்றை செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தின் அதிகாரம் இல்லாவிட்டால் உரிய வகையில் செயற்பட முடியாது.

எனது கொள்கை ரீதியிலான அரசியலை முன்னெடுக்கவே நாடாளுமன்ற தேர்தலில்கூட போட்டியிட்டேன்.  முதுகெலும்பு இருக்கும்வரை அரசியலில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.

முதுகெலும்பு இருக்கும்வரை அரசியலில் ஈடுபடுவேன். மைத்திரி திட்டவட்டம்.samugammedia எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான்  தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.முக்கிய அரசியல் கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் மைத்திரிபால சிறிசேனவின் இந்த அறிவிப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மைத்திரிபால சிறிசேன,அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுமானால் அதனை ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன்.அதேவேளை கடந்த 2015 இல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றேன். எனினும் எனக்கு தேவையானவற்றை செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தின் அதிகாரம் இல்லாவிட்டால் உரிய வகையில் செயற்பட முடியாது. எனது கொள்கை ரீதியிலான அரசியலை முன்னெடுக்கவே நாடாளுமன்ற தேர்தலில்கூட போட்டியிட்டேன்.  முதுகெலும்பு இருக்கும்வரை அரசியலில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement