மூதூர் பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் விசேட கூட்டம் மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று(16) காலை இடம்பெற்றது.
மூதூர் சுகாதார வைத்திய ஹில்மி முகைதீன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது டெங்கினை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ,கடந்த காலங்களில் மூதூரில் எந்த வீதத்தில் டெங்கு பரவியது, தற்போது எவ்வாறு உள்ளது ,டெங்குபரவும் இடங்கள் அதனை கண்டறிந்து அழிப்பது எப்படி என்கின்ற பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இவ் விசேட கலந்துரையாடலில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி, மூதூர் பிரதேச செயலாளர், மூதூர் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், மூதூர் நீர் வழங்கல் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ,பொலிஸார், கிராம உத்தியோகத்தர்கள் ,மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.