சீனாவில் மீண்டும் வேகமெடுத்த கொரோனாவால் ஒரு மாதத்தில் சுமார் 60,000 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் தொடக்கத்தில் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியதிலிருந்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட முதல் பெரிய உயிரிழப்பு எண்ணிக்கை இது ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா தொற்றை அடுத்து பல உலக நாடுகளும் தங்கள் நாடுகளில் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.