இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ் கலாசார மத்திய நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 74 வது குடியரசு தின விசேட நிகழ்வு இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச திணைக்களங்களின் தலைவர்கள் முப்படைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
குடியரசு தின நிகழ்வின் விசேட நிகழ்வாக இந்திய கலைஞர்கள் பங்குபற்றிய ரிதம் ஒப் காமணி எனும்இலங்கை இந்திய நட்புறவு அன்பினை பறைசாற்றும் வகையில் இந்திய கலைஞர்களால் இயற்றப்பட்ட பாடல்கள் அடங்கிய விசேட இசை நிகழ்வும் இடம்பெற்றது.