இலங்கையில் பாடல் பெற்ற திருக்கோயிலான திருக்கேதீஸ்வரத்தில் எதிர்வரும்சனியும் ஞாயிறும் மகா சிவராத்திரி விழா இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் இந்துக்களின் காப்பரணாக விளங்கும் கட்சியான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தமிழகத்திலிருந்து இலங்கை வந்துள்ளார்.
அவர்களை இலங்கை சிவசேனை அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன் உள்ளிட்டோர் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர்.