இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதம் அறிவிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்தை இலங்கை தெரிவித்துள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் இந்திய அதிகாரிகளிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்காக கடனாளிகளின் உறுதிமொழிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதம் அறிவிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்தை இலங்கை தெரிவித்துள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் இந்திய அதிகாரிகளிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்காக கடனாளிகளின் உறுதிமொழிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.