யுத்தத்தின் போது அங்கவீனமுற்று ஓய்வு பெற்ற முப்படையினர் மற்றும் உயிரிழந்தவர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக அங்கவீனமுற்ற தற்போதும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்ற முப்படையினர் மற்றும் யுத்தத்தின் போது உயிர் நீத்த வீரர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த கொடுப்பனவு இடை நிறுத்தப்படும் என எவரும் வீண் அச்சமடையத் தேவையில்லை என்று பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.