• Jul 02 2024

மதுக்கடைகளுக்கு ஜூலை 4ம் திகதி வரை பூட்டு..! வெளியான விசேட அறிவிப்பு samugammedia

Chithra / Jun 20th 2023, 8:59 am
image

Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் மகா விகாரையின் எசல திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மதுபானக் கடைகள் நேற்று (19) தொடக்கம் ஜூலை 4 ஆம் திகதி வரை மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆலயத்தின் எசல திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் எவரும் பூஜை வளாகத்திற்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதிக்குள் கடமைகளை மேற்கொள்வதற்காக ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கலால் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மதுக்கடைகளுக்கு ஜூலை 4ம் திகதி வரை பூட்டு. வெளியான விசேட அறிவிப்பு samugammedia வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் மகா விகாரையின் எசல திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மதுபானக் கடைகள் நேற்று (19) தொடக்கம் ஜூலை 4 ஆம் திகதி வரை மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், ஆலயத்தின் எசல திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் எவரும் பூஜை வளாகத்திற்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதிக்குள் கடமைகளை மேற்கொள்வதற்காக ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கலால் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement