பறவைகளிற்கு இரையிட்ட பறவை மனிதர் தற்பொழுது அவற்றுக்கு உணவளிக்க முடியாது தவித்து வருகின்றார்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் சேகரே கடந்த 25 ஆண்டுகளாக தினமும் தன்னைத் தேடி வரும் நான்காயிரம் பறவைகளுக்கு இரையிட்டு வந்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் , 40 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு வந்துவிட்ட நிலையில் மின்னணு கேமராக்களைப் பழுது பார்க்கும் வேலையினை செய்கின்றார்.
ராயப்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் குடியேறிய அவர் அந்த வீட்டின் மொட்டை மாடியில் பறவைகளுக்கு இரை வைக்கத் தொடங்க இரை தேடி வரும் பறவைகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து நான்காயிரமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வாடகை வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்க தீர்மானித்த வேளை இயற்கை ஆர்வலர்கள் பலர் அதை வாங்கி சேகருக்கே வழங்க முன்வந்த போதிலும் வீட்டின் உரிமையாளர் மறுத்ததுடன் வீட்டினையும் வேறு ஒருவரிற்கு விற்றுள்ளார்.
இதனால் சேகர் அண்மையில் வேறு வீட்டில் குடியேறியுள்ளார்.
தான் வீடு மாறியதால் இரை தேடி வரும் புறா, கிளி, சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக அவர் கவலையடைந்துள்ளார்.
பறவைகளுடனான பாச போராட்டம். உணவளிக்க முடியாது தவிக்கும் பறவை மனிதன்.samugammedia பறவைகளிற்கு இரையிட்ட பறவை மனிதர் தற்பொழுது அவற்றுக்கு உணவளிக்க முடியாது தவித்து வருகின்றார். சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் சேகரே கடந்த 25 ஆண்டுகளாக தினமும் தன்னைத் தேடி வரும் நான்காயிரம் பறவைகளுக்கு இரையிட்டு வந்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் , 40 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு வந்துவிட்ட நிலையில் மின்னணு கேமராக்களைப் பழுது பார்க்கும் வேலையினை செய்கின்றார். ராயப்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் குடியேறிய அவர் அந்த வீட்டின் மொட்டை மாடியில் பறவைகளுக்கு இரை வைக்கத் தொடங்க இரை தேடி வரும் பறவைகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து நான்காயிரமாக அதிகரித்துள்ளது.இந்நிலையில், வாடகை வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்க தீர்மானித்த வேளை இயற்கை ஆர்வலர்கள் பலர் அதை வாங்கி சேகருக்கே வழங்க முன்வந்த போதிலும் வீட்டின் உரிமையாளர் மறுத்ததுடன் வீட்டினையும் வேறு ஒருவரிற்கு விற்றுள்ளார். இதனால் சேகர் அண்மையில் வேறு வீட்டில் குடியேறியுள்ளார். தான் வீடு மாறியதால் இரை தேடி வரும் புறா, கிளி, சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக அவர் கவலையடைந்துள்ளார்.