இன்று காலை, அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசுவன் சந்தியில் வைத்து கசிப்புடன் 45 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பகுதியில் இருந்து ஊரெழு பகுதிக்கு 3000 மில்லிலீற்றர் கசிப்பினை எடுத்துச் சென்றவேளை அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.