• May 10 2024

மட்டு மயிலத்தமடு மாதவனை அத்துமீறிய குடியேற்ற வழக்கு...! 13ம் திகதிக்கு ஒத்திவைப்பு...!samugammedia

Sharmi / Nov 10th 2023, 9:48 pm
image

Advertisement

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றம் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்புக்காக வழக்கு எதிர்வரும் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கும் சொந்தமான காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த கடந்த 2023.09.22 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும் இன்று நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.

மகாவலி சார்பாகவும் மற்றும் அத்துமீறி குடியேறிய குற்றம் சுமத்தப்பட்ட தரப்பு பிரதிவாதிகள் சார்பாகவும் சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்து தமது அறிக்கைகளை மன்றுக்கு சமர்ப்பித்திருந்தனர்.

கடந்த வழக்கில் குறித்த 13 பேரும் மயிலத்தமடு மாதவனை பகுதியில் வசித்ததற்கான சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு தெரிவிருந்த நிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வாதங்களையும் சாட்சியங்களையும் நெறிப்படுத்திய நீதிபதி வழக்கு தீர்ப்புக்காக எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டார்.




மட்டு மயிலத்தமடு மாதவனை அத்துமீறிய குடியேற்ற வழக்கு. 13ம் திகதிக்கு ஒத்திவைப்பு.samugammedia மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றம் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்புக்காக வழக்கு எதிர்வரும் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கும் சொந்தமான காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த கடந்த 2023.09.22 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது.ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும் இன்று நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.மகாவலி சார்பாகவும் மற்றும் அத்துமீறி குடியேறிய குற்றம் சுமத்தப்பட்ட தரப்பு பிரதிவாதிகள் சார்பாகவும் சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்து தமது அறிக்கைகளை மன்றுக்கு சமர்ப்பித்திருந்தனர்.கடந்த வழக்கில் குறித்த 13 பேரும் மயிலத்தமடு மாதவனை பகுதியில் வசித்ததற்கான சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு தெரிவிருந்த நிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.வாதங்களையும் சாட்சியங்களையும் நெறிப்படுத்திய நீதிபதி வழக்கு தீர்ப்புக்காக எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement