புத்தளம் - அநுராதபுரம் வீதியின் 6ம் கட்டைப் பகுதியில் சுமார் 30ற்கும் அதிகமான யானைகள் இன்று சஞ்சரித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
குறித்த வீதியால் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் வாகங்களை நிறுத்தி யானைகள் சஞ்சரிக்கும் அரிய வகைக் காட்சியை பார்வையிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
குறித்த காட்டு யானகள் இரவு நேரத்தில் வீதியைக் கடந்து கிராமங்களுக்குல் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குறித்த பகுதியிலுள்ள மக்கள் இரவு வேலைகளில் வெளியில் செல்வதற்கு மிகவும் அச்சத்திற்கு மத்தியில் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது அச்சம் தெரிவிக்கின்றனர்.