தமிழகத்தில் நள்ளிரவு தாய்- மகள் இருவரும் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கலின் கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனியில் வசித்து வரும் தம்பதியினர் அய்யனார்- வள்ளியம்மாள்.
இவர்களது மகள் ராசாத்தி(வயது 32), இவரது கணவர் லட்சுமணன், நால்வரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
லட்சுமணன் அப்பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார்.
குறிப்பாக நேற்றிரவு ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் வள்ளியம்மாள், ராசாத்தி மற்றும் லட்சுமணனை கொடூரமாக வெட்டினர், இதில் சம்பவ இடத்திலேயே அம்மாவும்- மகளும் உயிரிழந்தனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் லட்சுமணனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தாடிக்கொம்பு பொலிசார் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் எதற்காக கொலை நடந்தது? முன்விரோதம் ஏதும் காரணமா? பழிவாங்கல் நடவடிக்கையா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளார் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
நள்ளிரவில் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்ட தாய்- மகள்- பழிவாங்கல் நடவடிக்கையா samugammedia தமிழகத்தில் நள்ளிரவு தாய்- மகள் இருவரும் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கலின் கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனியில் வசித்து வரும் தம்பதியினர் அய்யனார்- வள்ளியம்மாள்.இவர்களது மகள் ராசாத்தி(வயது 32), இவரது கணவர் லட்சுமணன், நால்வரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.லட்சுமணன் அப்பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார்.குறிப்பாக நேற்றிரவு ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் வள்ளியம்மாள், ராசாத்தி மற்றும் லட்சுமணனை கொடூரமாக வெட்டினர், இதில் சம்பவ இடத்திலேயே அம்மாவும்- மகளும் உயிரிழந்தனர்.சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் லட்சுமணனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த தாடிக்கொம்பு பொலிசார் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர்.குறித்த சம்பவம் எதற்காக கொலை நடந்தது முன்விரோதம் ஏதும் காரணமா பழிவாங்கல் நடவடிக்கையா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளார் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்