நல்லூர் திருவிழாவில் பெண் ஒருவரின் கைபேசியை திருடினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவுக்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வருகை தந்த பெண் அடியவர் ஒருவர் ஆலயத்தின் அருகிலுள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தியுள்ளார். அந்தச் சமயம் அந்தப் பெண்ணின் கைபேசி திருட்டுப் போயுள்ளது.
இது தொடர்பில் அந்தப் பெண் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதன் பிரகாரம் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார் CCTV கமெரா மூலம் சந்தேகநபரை இனங்கண்டு, நேற்றைய தினமும் குறித்த நபர் ஆலயத்துக்கு வருகை தந்தபோது பொலிஸார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.